-
தமிழுக்கு வந்த சோதனை...! இருப்பது 60 இடம்; சேர்ந்தது 8 பேர்
காரைக்குடி :தமிழில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை சட்டம் கொண்டு வரப்படும் என செம்மொழி மாநாட்டில் முதல்வரின் அறிவிப்புக்கு பின்னரும் தமிழ் கல்லு£ரிகளில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாமல் உள்ளது.
தமிழகத்தில் மதுரையில் செந்தமிழ் கல்லு£ரி, திருவையாறில் அரசர் தமிழ் கல்லு£ரி, தஞ்சை மாவட்டத்தில் கரந்தை தமிழ் கல்லு£ரி, மேலச்சிவபுரியில் சன்மார்க்க சபையின் கணேசர் செந்தமிழ் கல்லு£ரி, காரைக்குடியில் ராமசாமி தமிழ் கல்லு£ரி, பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லு£ரி என 6தமிழ் கல்லு£ரிகளில் இருந்தன.
தற்போது, மதுரை, காரைக்குடியில் உள்ள கல்லு£ரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மற்ற கல்லு£ரிகள் கலைக்கல்லு£ரிகளாக மாற்றப்பட்டு விட்டன. பிளஸ்2 தேர்வுகள் முடிந்து மாணவர்கள் கல்லு£ரிகளில் சேர்ந்து வரும் நிலையில் தமிழ் கல்லு£ரிகளில் மட்டும் சேர்க்கை குறைவாகவே இருந்தது.
சமீபத்தில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டின் நிறைவில் தமிழில் படிப்பவர்களுக்கு வேலைவாய்பில் முன்னுரிமை என சட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பின்னர் இக்கல்லு£ரிகளில் சேர்க்கை அதிகமாக இருக்கும் என நினைத்தனர்.ஆனாலும் தமிழ் படிப்பதில் மாணவர்களிடையே ஆர்வம் குறைவாக உள்ளதால் மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளது. மதுரை செந்தமிழ்கல்லு£ரியில் 70 இடங்களுக்கு சுமார் 50மாணவர்களும், காரைக்குடி ராமசாமி கல்லு£ரியில் 60 இடங்களுக்கு சுமார் 8பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
கல்லு£ரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்கல்லு£ரிகளில் சேர இடம் கிடைக்காமல் இருந்தது. ஆசிரியர் பயிற்சி கல்லு£ரிகள் வருகைக்கு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கை குறைந்து தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
மாணவர்களின் எண்ணிக்கையை பொருத்து தான் இணை பேராசிரியர்களின் எண்ணிக்கையை அரசு உயர்த்தும். இதற்கு குறைந்தது 22மாணவர்களாவது சேர வேண்டும். மாணவர் சேர்க்கையை பொருத்தவரை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். பல்கலைக்கழகம் காலக்கெடுவை நீட்டித்தால் ஆகஸ்ட் வரை சேர்க்கை நடத்தலாம், என்றார்.
தமிழாசிரியர்களுக்கு பற்றாக்குறை:காரைக்குடி கல்லு£ரியை பொருத்தவரை கடந்த 2005&2006ல் 45மாணவர்களும், 2007&2008ல் 27 மாணவர்களும், 2008&2009ல் 26 மாணவர்களும், 2009&2010ல் 30 மாணவர்களும் சேர்ந்தனர். இந்த கல்வியாண்டியில் இதுவரை 8பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் வரும் ஆண்டுகளில் தமிழ் படிக்க மாணவர்களே இல்லாத நிலை ஏற்படலாம். இதன் மூலம் பள்ளிகளில் தமிழாசிரியர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது, என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)


0 comments: