-
ஆகஸ்ட் 24-ம் தேதி போனி வர்மா - பிராகஷ் ராஜ் திருமணம்
மனைவி லலிதகுமாரியை விவாகரத்து செய்துவிட்ட பிரகாஷ் ராஜ், வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நடன இயக்குநர் போனி வர்மாவை இரண்டாவதாக திருமணம் செய்கிறார்.
மும்பையில் நடக்கும் இந்த திருமணத்துக்கு பாலிவுட், தெலுங்கு மற்றும் குறிப்பிட்ட சில தமிழ் சினிமா பிரமுகர்களை அழைத்துள்ளார் பிரகாஷ் ராஜ்.
இதற்கிடையே, அவர் தயாரித்துள்ள இனிது இனிது (ஹேப்பி டேஸ் தெலுங்கு பட ரீமேக்) படத்தை வாங்க ஆளில்லாத சூழ்நிலை உருவானது. இந்தப் படத்தை வெளியிட்ட பிறகே தனது திருமணம் குறித்து அறிவிக்கவிருந்தாராம் பிரகாஷ் ராஜ். ஆனால் படம் வெளியாகுமா என்பதே சிக்கலில் இருந்ததால், என்ன செய்வதென்ற தவிப்பில் இருந்தார்.
இந்த நேரம் பார்த்து அவருக்குக் கைகொடுத்தார் கல்பாத்தி எஸ் அகோரம். இனிது இனிது படத்தின் முழு திரையரங்க உரிமையையும் கணிசமான விலைக்கு அவர் வாங்கிக் கொண்டார். அந்த சந்தோஷத்தில் இப்போது தனது திருமணத் தேதியை பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.
பிரகாஷ் ராஜுக்கு கல்பாத்தி அகோரம் தந்துள்ள திருமணப் பரிசு இது என்பதே கோடம்பாக்கத்தில் பேச்சாக இருக்கிறது!
திருமணம் முடிந்ததும், குலுமனாலிக்கு ஹனிமூன் செல்கின்றனர் போனிவர்மா - பிரகாஷ் ராஜ் ஜோடி.
more
-
வம்சம் விமர்சனம்
தனது முதல் படைப்பான பசங்க படத்தின் மூலம் சிறுவர்களுக்கு நல்ல நீதி கூறிய இயக்குநர் பாண்டியராஜ், தனது இரண்டாவது படைப்பான வம்சம் மூலம் பெரியவங்களுக்கு பிடித்ததும், பிடிக்காததுமான ஜாதியை படமாக்கி இருக்கிறார். இரண்டாவது படத்திலேயே ஏன் இந்த ஜாதி? வியாதி எல்லாம் பாண்டி? கதைப்படி மது,சூது என அலைந்து திரிந்து மறைந்த ரவுடி ரத்னத்தின் வாரிசு என்பதால் நாயகன் அன்பரசு எனும் அருள்நிதிக்கு ஊரில் யாரும் பெண் தர மறுக்கிறார்கள். அதனால் பக்கத்து ஊர் மலர்க்கொடி சுனைனா மீது அருளுக்கு பார்த்தவுடனேயே காதல் பற்றிக்கொள்கிறது. இவர்களது காதல் பூத்து காய்த்து கனியாகும் தருவாயில் அன்பரசு என்ற அருள்நிதியின் ஊர் பெரியவர் சீனிக்கண்ணு ஜெயப்பிரகாஷிக்கும் சுனைனாவின் அப்பாவிற்குமிடையில் ஒரு குத்து வெட்டு கேஸ் பஞ்சாயத்து. அதில் ஜெயபிரகாஷின் மானம் மரியாதை எல்லாம் பறிபோக, கோவில் திருவிழா நாளில் அதற்கு பழிக்கு பழியாக சுனைனாவின் அப்பாவை தீர்த்து கட்டுகிறார் ஜெயப்பிரகாஷ். பொட்ட புள்ள என்றாலும் ஒத்த புள்ள என்பதால் ஆண் பிள்ளையாக வளர்ந்திருக்கும் சுனைனா, தன் அப்பாவை தீர்த்து கட்டிய ஜெயப்பிரகாஷை முச்சந்தியில் வைத்து சாணியை கரைத்து ஊற்றி விளக்குமாற்றால் அடிக்க, அருள்நிதி சுனைனாவின் காதலுக்கு எமனாகிறார்கள் ஜெ.பி.,யும் அவரது வாரிசும். ஊர் பெரிய மனிதரை பகைத்துக் கொண்டு அருள்நிதியும் இணைந்தார்களா? அல்லது பிரிந்தார்களா? என்பதற்கு மட்டுமல்ல நாயகரின் அப்பா ரவுடி ரத்தினத்தின் சாவிற்கு யார் காரணம்? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் விடை அளிக்க முயற்சிக்கிறது வம்சம் படத்தின் மீதிக்கதை.
எப்பாடுபட்டாலும் பிற்பாடு கொடாதவர் வம்சத்தில் வாரிசாக பிறந்த அன்பரசாக அருள்நிதி. அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு அசத்தலாக நடித்து ஆரம்ப காலத்தில் மேடை நாடகங்களில் நடித்த பெருமை உடைய முதல்வர் தாத்தா கருணாநிதியின் பெயரை காபந்து செய்து விடுகிறார். நல்ல உயரம், வாட்டசாட்டமான உருவம் சாந்தமான முகம் என தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு தேவையான அத்தனை தகுதிகளும் அருள்நிதிக்கு கொட்டி கிடக்கிறதென்றால் மிகையல்ல. கிளாமர் ஹீரோயின் சுனைனா இதில் கிராமத்து ஹீரோயினாக மலர்கொடியாக பாவாடை தாவணியில் பளிச்சென்று நடித்திருக்கிறார். அதுவும் பசுமாட்டிற்கு அசின் என்று பெயர் வைத்து அதன் மூலம் அவரும், அருளும் வளர்க்கும் காதல் செம காமெடி! பத்தாததற்கு அருளின் காதலுக்கு உதவும் கஞ்சா கருப்பு வளர்க்கும் பூனைக்கு த்ரிஷா எனப்பெயர் சூட்டி தனக்கேற்ற எள்ளுருண்டையுடன் காதல் வளர்க்கும் கலகலப்பு வேறு. வில்லன் சீனிக்கண்ணூக ஜெயப்பிரகாஷ், மருதமுத்துவாக வரும் ராஜ்குமார், அருள்நிதியின் அம்மாவாக வரும் அனுபம்குமார், சொம்புமணி கஞ்சாகருப்பு, உள்ளிட்ட எல்லாரையும் விட கொஞ்ச காட்சிகளே வந்து மடிந்து போகும் ரவுடி ரத்னம் கிஷோர்குமாரின் நடிப்பு பிரமாதம். ஆனாலும் பெண்களை அடிக்கமாட்டாங்க நம்ம வம்சத்தில் என பெருமையாக சொல்லும் அந்த வம்சத்தில் சூதாடியாகவும், ஊதாரியாகவும் சுற்றி திரியும் கிஷோர் குமாரை அருள்நிதியின் அம்மா பெருந்தன்மையாக பேசுவது நெருடலாக இருக்கிறது. மதுவும் சூதுவும் கூட ஒரு வம்சத்தில் பெருமை சேர்க்கும் பட்டியலில் எப்போது சேர்ந்தது? எப்படி? எவ்வாறு சேர்ந்தது..? என்பது புரியாத புதிர்!
படம் முழுக்க செல்போனை சிக்னலுக்காக மரத்தில் கட்டி தொங்கவிட்டு நாயகன் நாயகி உள்ளிட்ட எல்லோரும் மரத்தின் மீது ஏறி பேசுவது, பசுவுக்கு அசின் என்றும், பூனைக்கு த்ரிஷா என்றும் பெயர் சூட்டி தங்கள் காதலை வளர்ப்பது என காட்சிகளுடன் ஒட்டியே காமெடி காட்சிகளை நிறைவே இருந்தும் ஆரம்பம் முதல் கோவில் திருவிழா, அதை ஒட்டிய நீண்டநெடிய பாடல்காட்சி முதல் நாள், இரண்டாவது நாள் என பத்து பதினைந்து நாட்களும் மண்டகப்படி செய்வோரின் பெயர் பட்டியலை மைக்கில் வாசிப்பது... ஒரே ஜாதியின் பெருமை பேசுவதுஎன நிறையாவே இழுவையாக இருப்பதை தவிர்த்திருந்தால் வம்சம் மேலும்அம்சமாக இருந்திருக்கும். தன் மகனுக்காக மோகனா மூவிஸ் மு.க. தமிழரசு., மக்கள் தொடர்பு நிகிலில் தொடங்கி ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி, இசை தாஜ்நூர், எழுத்து இயக்கம் பாண்டிராஜ் என எல்லோரையும் பார்த்து பார்த்து பொறுக்கி எடுத்திருக்கிறார். அதேபோல் ஒரே ஜாதியை உயர்த்தி பிடிக்கும் கதையை தவிர்த்து ஜனரஞ்சகமான கதையையும் தேர்ந்தெடுத்திருந்தால் வம்சம் மேலும் அம்சமாக இருந்திருக்கும். ஆகமொத்தம் அது இல்லாதபட்சம் வம்சம் அம்சமும் அல்ல! துவம்சமும் அல்ல!
more
-
பத்தில் நான்கு இடம் எந்திரன் பாடல்களுக்கே!
தமிழ், தெலுங்கு , இந்தி என இந்திய திரையுலகையே கலக்கிக் கொண்டிருக்கின்றன சூப்பர் ஸ்டார் ரஜினி , நடிக்க ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள எந்திரன் படத்தின் பாடல்கள்.
தமிழில் டாப் 10 பாடல்களில் முதல் நான்கு இடங்களை எந்திரன் பாடல்களே பிடித்துள்ளன.
மியூசிக்வேர்ல்டு டாப் 10-ல் கிளிமாஞ்சாரே... பாடல் தொடர்ந்து இரு வாரங்களாக முதல் இடத்தில் உள்ளது. அரிமா அரிமா பாடல் இரண்டாவது இடத்திலும், காதல் அணுக்கள் மூன்றாம் இடத்திலும், இரும்பிலே ஒரு இதயம்... பாடல் நான்காம் இடத்திலும் உள்ளன.
மிர்ச்சி டாப் 10-ல் கிளிமாஞ்சாரோ முதல் இடத்திலும், மற்ற மூன்று பாடல்கள் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களிலும் உள்ளன.
இந்தியிலும் எந்திரன் பாடல்கள் புதிய சாதனைப் படைத்துள்ளன. வீனஸ் ரெக்கார்ட்ஸ் அண்ட் டேப்ஸ் நிறுவனம் இதன் உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. இந்தியில் அரிமா அரிமா மற்றும் ரஹ்மான் பாடியுள்ள பாடல் பெரும் வெற்றியடைந்துள்ளன. ரஜினி நடித்த படம் ஒன்றின் பாடல்கள் இந்த அளவு இந்தியில் பேசப்படுவது இதுவே முதல்முறை. தெலுங்கில் ஏற்கெனவே பரபரப்பான விற்பனையில் உள்ளன எந்திரன் ஆடியோ சிடிக்கள்.
எந்திரனுக்குப் பிறகு ஏ ஆர் ரஹ்மான் தமிழில் எந்தப் படத்துக்கும் ஒப்பந்தமாகவில்லை. அவர் கைவசம் உள்ள இன்னொரு தமிழ்ப் படம் ரஜினியின் சுல்தான் தி வாரியர். ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 3 இடியட்ஸ் ரீமேக்குக்கூட இந்த முறை ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
more
-
விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: ஸ்ரீபெரும்புதூரில் ஆர்ப்பாட்டம்-ஜெ
சென்னை: விமான நிலையம் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதைக் கண்டித்து ஸ்ரீபெரும்புதூரில் அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீபெரும்புதூரில் க்ரீன்பீல்டு விமான நிலையம் அமைக்க ஏதுவாக, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட கடம்பத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த வயலூர், அகரம், உச்சிமேடு, சூராகபுரம், மும்முரகுப்பம், கன்னிகாபுரம், வாசனாம்பட்டு, திருப்பந்தியூர்,
திருமணிகுப்பம், பன்னூர், நரசமங்கலம், கொட்டையூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களையும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கிளாய், சிறுகிளாய், பாடிசேரி, ராமாபுரம், வடமங்கலம், பூதேரிபண்டை, மாம்பாக்கம், இருங்குளம், மொளச்சூர்,
திருமங்கலம், கண்டிகை, சோகண்டி ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களையும், ஆக மொத்தம், 6,921 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் திமுக அரசு தற்போது வெகு வேகமாக ஈடுபட்டு வருகிறது.
இந்தத் திட்டத்திற்காக, விவசாய விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய விவசாய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கக்கூடிய துர்ப் பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே வேளாண் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், இது போன்ற விவசாயிகளுக்கு எதிரான செயல் விவசாய உற்பத்தியை மேலும் குறைக்க வழி வகுக்கும். இது மட்டுமல்லாமல், இப்பகுதியில் உள்ள பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை இடிப்புக்கு ஆளாக நேரிடும்.
இதை கண்டித்தும், க்ரீன் பீல்டு விமான நிலையத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சில நாட்களுக்கு முன்பு மேற்படி கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு கொடுப்பதற்காக சென்ற போது, காவல் துறையினரின் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர்
இது மட்டுமல்லாமல், கடம்பத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் கே. சுதாகர் உட்பட பொதுமக்கள் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த செயலை கண்டித்து நான் ஏற்கனவே அறிக்கை விடுத்திருந்தேன்
இந்தத் திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தி, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில், நாளை ஸ்ரீபெரும்புதூர்- திருவள்ளுவர் சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
more
-
டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு-புதிய சலுகைகள்
சென்னை : "டாஸ்மாக்' ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு திடீரென அறிவித்து உள்ளது. ஊழியர்கள் கடந்த 11ம் தேதி, "ஸ்டிரைக்' நடத்திய நிலையில், திடீர் சலுகை அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளதோடு, ஊழியர்களின் கோரிக்கைக்கு படிந்துள்ளது.
பணி நிரந்தரம் செய்தல், வார விடுமுறை என்பது போன்ற கோரிக்கைகளை, "டாஸ்மாக்' ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர். அரசு கண்டு கொள்ளாததால், தனித்தனியாக போராடி வந்த அண்ணா தொழிற் சங்கபேரவை,ஏ.ஐ.டி. யூ.சி., - சி.ஐ.டி.யூ., - பாட்டாளி தொழிற் சங்கங்கள்ஒன்றாக இணைந்து,கூட்டு நடவடிக்கைகுழுவை துவக்கின. கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11ம் தேதி ஒரு நாள், "ஸ்டிரைக்' நடத்தின. தமிழக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் மூலம், "ஸ்டிரைக்' முறியடிக்கப் பட்டது. 90 சதவீதத்திற்கும் மேலான கடைகள் வழக்கம்போல் இயங்கின. போராட்டத்தை வெற்றி கரமாக முறியடித்த தமிழக அரசு, தற்போது, "டாஸ்மாக்' ஊழியர் களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்டபல்வேறு சலுகைகளை அறிவித்துள் ளது.
முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்புகள்: மேற்பார்வையாளர்கள் மாத தொகுப்பூதியம் 4,000த்திலிருந்து 4,500 ரூபாயாகவும், விற்பனையாளர்கள் தொகுப்பூதியம் 2,800லிருந்து, 3,200 ரூபாயாகவும், மதுக்கூட உதவியாளர் தொகுப்பூதியம் 2,100லிருந்து, 2,400 ரூபாயாகவும் உயர்த்தப் பட்டுள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் பணியாளர்கள் பயன் பெறுவர். "டாஸ்மாக்' பணியாளர் களின், "டிபாசிட்'டுக்கான வட்டி 3.5 சதவீதத்திலிருந்து, 6 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால்,ஆண்டு ஒன்றுக்கு மேற்பார்வையாளர்களுக்கு 1,250, விற்பனையாளர்களுக்கு 375 ரூபாய், உதவியாளர்களுக்கு 250 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்."டாஸ்மாக்' பணியாளர் களுக்குவழங்கப்படும் ஊக்கத்தொகை 1.5 சதவீதத்திலிருந்து, 1.75 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
மதுபானவிற்ப னைக்குபின், கடைகளில் தேங்கும் காலி அட்டைப் பெட்டிகள், பணியாளர் களால் ஒப்பந்ததாரர்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த அட்டைப் பெட்டிகளில் ஏற்படும் சேதம் 2.5 சதவீதமென கணக்கிடப் பட்டுள்ளது.அது, தற்போதுபணியாளர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப் படுகிறது. இனி அட்டைப் பெட்டிகள் சேதத்தினால் ஏற்படும் இழப்பை, நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். இந்த சலுகைகள் அனைத்தும் வரும் செப்.,1முதல்நடைமுறைக்கு வரும். அரசின் தூய நோக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, தொடர்ந்து பணியாற்றி வரும், "டாஸ்மாக்' ஊழியர்களுக்கு, அரசு உரிய நேரத்தில் சலுகைகளையும், உரிமைகளை அளிக்கும் என்பதற்கு, இது எடுத்துக்காட்டு. இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
"டாஸ்மாக்' ஊழியர்கள் நடத்திய போராட்டத்தை முறியடிப்பதில் வேகம் காட்டிய தமிழக அரசு, தொழிற்சங்கங்களுடன் கூட ஆலோசிக்காமல், திடீரென பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த முடிவு, ஊழியர்களிடம் அரசு படிந்துள்ளதாகவே கருதப்படுகிறது.
முக்கிய கோரிக்கை கதி? "டாஸ்மாக்' தொழிற் சங்க கூட்டு நடவடிக்கை குழு வெளியிட் டுள்ள அறிக்கையில், "தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல், அறிவிப்பை வெளியிட் டுள்ளதுமோசமான செயல். பணி நிரந்தரம், வார விடுமுறை, தினமும் எட்டு மணி நேர வேலை போன்ற முக்கிய கோரிக் கைகள் பற்றி, எந்த அறிவிப்பும் இல்லாமல், மற்ற அறிவிப்புக்கள், ஊழியர்களை திருப்திப் படுத்தாது என,தெரிவிக்கப் பட்டுள்ளது.
more
Subscribe to:
Posts (Atom)




