• வண்டலூர் பூங்காவில் 3 சிங்க குட்டிகள் அடுத்தடுத்து சாவு


    சென்னை: சென்னை வண்டலூர் பூங்காவில் சிங்கத்துக்குப் பிறந்த 3 குட்டிகளும் அடுத்தடுத்து இறந்துவிட்டன.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் கவிதா என்ற சிங்கத்துக்கு கடந்த ஜூன் 30ம் தேதி 3 குட்டிகள் பிறந்தன.

    இதில் ஒரு குட்டி அன்றே இறந்து விட்டது. மற்ற 2 குட்டிகளும் சோர்வாகவே காணப்பட்டன. இதில் அடுத்த ஒரு வாரத்திலேயே இன்னொரு குட்டியும் இறந்துவிட்டது.

    இந் நிலையில் நேற்று 3வது குட்டியும் இறந்து விட்டது.

    இந்த இரு குட்டிகளும் மிக பலவீனமாக இருந்ததோடு பால் குடிக்காமலும் இருந்துள்ளன. இதனால் அவரை இறந்ததாகத் தெரிகிறது

0 comments:

Leave a Reply

Enter your email address:

Delivered by FeedBurner