• மும்பை துறைமுக பணி நேற்று மீண்டும் துவங்கியது

    மும்பை: கடந்த வாரம் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து, மூடப்பட்ட மும்பை துறைமுகம், நேற்று மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.

    கடந்த 7ம் தேதி மும்பைக்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் பனாமா நாட்டை சேர்ந்த சித்ரா என்ற சரக்கு கப்பலும், கலீஜியா என்ற கப்பலும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதனால், சித்ரா கப்பல் சேதமடைந்து ஒரு பக்கமாக சாய்ந்தது. இந்த கப்பலில் இருந்த ஆயிரத்து 219 கன்டெய்னர்களில் 300 பெட்டகங்கள் கடலில் மூழ்கின. அதுமட்டுமல்லாது இந்த கப்பலில் இருந்த 2,662 டன் கச்சா எண்ணெயில், 500 டன் கச்சா எண்ணெய் கசிந்து கடலில் பரவியது. இதனால், மும்பை அருகே இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு எண்ணெய் படலம் பரவியது.

    கடலில் மூழ்கிய சரக்கு பெட்டகங்களில் பாஸ்பரஸ், சோடியம் ஹைட்ரோகுளோரைடு, பைரிதிராய்ட் உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள், கடலில் கலந்து சுற்றுச்சூழலுக்கு பெருத்த கேடு விளைவித்துள்ளன. இச்சம்பவங்களால் கடந்த ஐந்து நாட்களாக இப்பகுதியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மும்பைக்குள் வரமுடியாமல் 12 கப்பல்கள் துறைமுகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தன. ஐந்து நாட்களுக்கு பிறகு மும்பை துறைமுகம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து, கடலோர காவல் படை உதவியுடன் கப்பல்கள் போக்குவரத்து துவங்கியது.

0 comments:

Leave a Reply

Enter your email address:

Delivered by FeedBurner