• நக்சல்கள் மீது தாக்குதல் நடத்த விமானப்படைக்கு அனுமதி

    புதுடில்லி : நக்சலைட்கள் தாக்கும் பட்சத்தில், தற்காப்புக்காக அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என, இந்திய விமானப் படைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நக்சலைட் அச்சுறுத்தல் அதிகமுள்ள மாநிலங்களில் அவர்களை ஒடுக்க, விமானப்படை விமானங்களை பயன்படுத்த வேண்டும் என, விமானப்படை கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக பார்லிமென்டிலும் விவாதங்கள் நடைபெற்றன. உள்நாட்டு பாதுகாப்புக்கு நக்சலைட்கள் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளனர் என, பிரதமர் மன்மோகன் சிங்கும் கவலை தெரிவித்திருந்தார். தற்காப்புக்காக நக்சலைட்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் பட்சத்தில், அதற்காக சிறப்பு அனுமதி பெற தேவையில்லை என, ராணுவ அமைச்சர் அந்தோணியும், கடந்த நவம்பரில் நடந்த பார்லி கூட்டத்தொடரில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், நக்சல் அச்சுறுத்தல் அதிகமுள்ள மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் ராணுவத்தினர் மீது, நக்சலைட்கள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், தற்காப்பு கருதி, ராணுவத்தினரும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என, விமானப்படைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நக்சலைட்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையில், மிகவும் கடுமையான ஆயுதங்களை உபயோகிக்கக் கூடாது; அவற்றை, விமானப்படை கமாண்டோக்கள் தான் பிரயோகிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக, விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 comments:

Leave a Reply

Enter your email address:

Delivered by FeedBurner