-
பத்தாம் வகுப்பு மட்டும் படித்தவருக்கு ஐ.ஏ.எஸ். பதவி!
சென்னை: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த மூத்த அதிகாரிக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
18 வயதில் இளநிலை உதவியாளராக அரசுப் பணியில் சேர்ந்த அவருக்கு இன்னும் 5 ஆண்டு பதவிக் காலம் உள்ளது.
தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாவது ஒரு வகை. பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாவது இன்னொரு வகை.
அந்த வகையில் இப்போது தமிழகத்தில் 19 பேருக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமியும் ஒருவர். இவரது கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே.
1973ம் ஆண்டு குரூப் 4 தேர்வு மூலம் அரசுப் பணியில் சேர்ந்த இவர் பள்ளிப்பட்டு தாலுகாவில் இளநிலை உதவியாளராக பணியைத் தொடங்கியவர். பின்னர், வட்டாட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என பதவியுயர்வுகள் பெற்றார்.
அரசுத்துறையில் பல்வேறு பணிகளில் 37 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். இந்த நீண்ட அனுபவமும் பணியில் சிறப்பாக செயல்பட்டதுமே அவருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தை அளித்துள்ளது.
ஐ.ஏ.எஸ். தேர்வெழுதி நேரடியாக அதிகாரிகளாகும் நபர்களைவிட பெரும்பாலான நேரங்களில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளே சிறப்பான முடிவுகளை எடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் முனுசாமியின் அனுபவத்துக்கு இந்த ஐ.ஏ.எஸ் அந்தஸ்து பொறுத்தமானதே என்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள்.
Subscribe to:
Post Comments (Atom)


0 comments: