• கேட்ட கதையும்; கேட்காத பாடமும் - கரும்புலிகள்!!


    கரும்புலிகள் கதை கேளு
    மரணமெல்லாம் தூசி பாரு, 
    ரத்தம் சொட்டிய மண்ணெடுத்து 
    அவர்கள் உயிர்வாசம் நுகர்ந்து பாரு;

    கரும்புலிகள் உதிரம் பூத்து 
    கடல்கூட அழுது சிவந்தது பாரு -
    உயிரும் வருடமும் பலிகொடுத்தும் 
    ஈழம் மட்டும் - இலங்கையாச்சி பாரு;

    மில்லர் போல பலபேரின் 
    இலட்சியக் கனவு சாமாதியில் பாரு -
    கமலுக்காக ஒரு பெண்ணின் 
    கட்டாத தாலி விதவையாச்சி பாரு;

    அங்கையர்கன்னி வரலாறெல்லாம் 
    கடலெழுதிக் கொண்டது பாரு -
    பெண்கள் செய்த சாகசங்கள் - கூட 
    வெற்றிகொண்ட மரணமாச்சி பாரு;

    காந்தரூபன், கொலின்ஸ், டாம்போவின் இறப்பெல்லாம் 
    விடுதலையின் வேட்கை பாரு -
    உயிர்கள்; பல கொடுத்து - காத்த ஈழம்
    முள்ளிவாய்க்காலோடு மௌனமாச்சி பாரு;

    ஒன்றா இரண்டா உயிர்கொடுமை 
    எல்லாம் -
    ஈழமண்ணின் வீரம் பாரு -
    விட்ட உயிர்கள் முளைத்தொரு நாள் 
    எங்கள் தேசம் வெல்லும்; உறுதி பாரு;

    கரும்புலிகள் கதை படித்தால் 
    செத்த -
    பிணம் கூட வீரங் கொள்ளும் பாரு;
    கரு விதைத்த கரும்புலிகளின்  
    சமாதி கூட பாடம் புகட்டுது பாரு!!

0 comments:

Leave a Reply

Enter your email address:

Delivered by FeedBurner